மட்டக்களப்பு கிரான் திகிலிவெட்டை ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய, கௌரவிப்பு நிகழ்வு

0
96

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகப் பணிகளை ஆற்றி வருவோர், கிரான் திகிலிவெட்டை ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் கௌரவிக்கப்பட்டனர். ஆலய தர்மகர்த்தா சிவஸ்ரீ செ.மகேந்திர குருக்களின் வழிகாட்டலில் நிகழ்வு நடைபெற்றது.


கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.சித்திரவேல்,வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் முகமட் ஜமீல்,சந்திவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மு.சுதர்சன், சமூகசேவையாளர் ஆ.மோகேஸ்வரன், அண்ணாவியார் சி.ஆறுமகம் மற்றும் ஊடகவியலாளர் க.ருத்திரன் ஆகியோர்கள் பொன்னாடை போர்த்தி
கௌரவிக்கப்பட்டனர். கண்டி இராசன் கதை கூறும் தென்மோடி நாட்டுக் கூத்தும் நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.