மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் டெங்கு அற்ற பாடசாலை எனும் தொனிப்பொருளில்
அதிபர் சி.சசிதரன் தலைமையில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
சிரமதான நடவடிக்கையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பாடசாலை வளாகத்தில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய இடங்கள், நீர் தேங்கி நிற்கும் இடங்கள் இனங்காணப்பட்டு சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்