மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறுவர் சபையின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில்
இன்று நடைபெற்றது.
கோறளைப்பற்று பிரதேச செயலக, சிறுவர் சபையின் தலைவர் வி.அரோஜன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டமானது பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலில் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்
அ.அழகுராஜினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் உட்பட பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.