மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது!

0
15

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் உள்ள படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான நினைவுத்தூபிக்கு அருகே
முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று பரிமாறப்பட்டது.
பொங்கு தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் மே12 முதல் மே 18 வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்படும் நிலையிலேயே
முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் உட்பட அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பலரும்
இதில் கலந்துகொண்டனர்
சத்துருக்கொண்டான் நினைவு தூபியில் ஈகைச் சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.