மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் 15 கைதிகள் விடுதலை!

0
29

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 ஆண் கைதிகளும்
ஒரு பெண் கைதியுமாக 15 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் பி.டி.எல்.டப்ளியு.நாணயக்கார, ஜயந்திபுரம் பௌத்த மத்திய நிலைய விகாராதிபதி உள்ளிட்ட சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள்
பலரும் கலந்து கொண்டனர்.
சிறு குற்றம் புரிந்த, தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.