மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை
விளையாட்டுகழகத்தின் 50வது ஆண்டு

0
287

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டுகழகத்தின் 50ஆவது ஆண்டு
பூர்த்தியினை முன்னிட்டு பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையிலான சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று சிவானந்தா பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
கல்லடி- உப்போடைசிவானந்தா தேசிய பாடசாலையின் விளையாட்டு மற்றும் கல்விதுறையினை மேம்படுத்தும் வகையில் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில பாடசாலையின்; விளையாட்டுகழகத்திற்கு வாழ்நாள் அங்கத்தவர்களாக மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையின் கீழ் பழைய மாணவ சங்கத்தின் தலைவரும் பிரதேச செயலாளருமான வி.வாசுதேவன் தலைமையில் பழைய மாணவர்களின ;ஒழுங்கமைப்பில் பழைய மாணவர்களுக்கிடையிலான
சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட சுற்றுப்போட்டி நடைபெற்றது .

அணிக்கு 6 பேர்கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பழைய மாணவர்களின் 29 விளையாட்டுகழக அணிகள் பங்கேற்றனர்.
நிகழ்வில் ஆன்மீக அதிதியாக ராமகிருஷ்ண மிஷன ;பிரதம முகாமையாளர் ஸ்ரீமத்
சுவாமி தக்ஷாநந்தாமகராஜ்,பழைய மாணவ சங்கத்தின் முன்னாள் தலைவர்களான வைத்தியர்சுந்தரேசன், பொறியிலாளர்எம். மங்களேஸ்வரன் மற்றும் முன்னாள்
தலைவர்.சசிகரன் மற்றும் பழைய மாணவர்கள ;கலந்து கொண்டிருந்தனர்.