ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் ‘தெங் செபத ‘ இப்போது சௌக்கியமா எனும் தொனிப்பொருளில் தொழிலாளர் மே தின எதிர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் இன்று மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டன .
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசத்திற்கான தலைவர் குணரட்ணம் கிரிதரன் தலைமையில் முன்னெடுக்கப்பட மே தின எதிர்ப்பு பேரணி ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் ,மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் , கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
உலகளாவிய ரீதியில் தொழிலாளர்கள் சர்வதேச தொழிலாளர் தினத்தினை இன்று கொண்டாடுகின்ற நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை முன்னிலைப்படுத்தி அனைத்து தொழில் சங்கங்களின் அமைப்புக்கள், அரசியல்கட்சிகள், தொழிலாளர் அமைப்புக்கள் என ஒன்றிணைந்து மேதின நிகழ்வுகளுடன் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு பேரணிகளும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.