மட்டக்களப்பு பனிச்சையடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வு

0
90

மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறும் நிகழ்வு இரண்டாவது நாளாக
இன்றும் நடைபெற்றது.
இன்றைய தினம் மட்டக்களப்பு பனிச்சையடியில் உள்ள படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியருகே நிகழ்வுகள்
நடைபெற்றன.
மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதிஅ.அமலநாயகியின் தலைமையில் நடைபெற்ற
நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கஞ்சி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.