மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில், காரொன்றிலிருந்து ஒரு தொகை போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

0
75

மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில், காரொன்றிலிருந்து, விசேட அதிரடிப்படையினரால் ஒரு தொகை போதை மாத்திரைகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
போதை மாத்திரைகளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில், நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படை புலனாய்வுத்துறை வழங்கிய தகவலின் அடிப்படையில், கல்லடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான
விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே, போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
48 பெட்டிகளில், ஆயிரத்து 440 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர், கார் மற்றும் போதை மாத்திரைகளுடன் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் பாரப்படுத்தப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை மட்;டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

மட்டக்களப்பு வாகரையில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் வாகரைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே
இக் கைது நடவடிக்கை இடம்பெற்றதோடு, கசிப்பு உற்பத்தியும் முறியடிக்கப்பட்டது.
270 லீற்றர் கசிப்பு வடி சாராயமும் 9 கோடா பரல்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.