மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயமும் மட்டக்களப்பு எகெட் கரித்தாஸ் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த
இரத்தான முகாம், மரியாள் பேராலய வளாகத்தில் இன்று நடைபெற்றது.
எகெட் கரித்தாஸ் நிறுவன இயக்குநர் அருட்பணி நிக்சன் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இரத்ததான ஆரம்ப நிகழ்வில் எகெட் கரித்தாஸ் நிறுவன உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், புனித மரியாள் பேராலய பங்கு மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு
இணங்க ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் ஒழுங்குபடுத்தப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் பி.பிரஷ்ணவி, இரத்த வங்கி பிரிவு பொதுசுகாதார பரிசோதகர் எம்.எம்.பைசல் மற்றும் இரத்த வங்கி பிரிவு ,தாதிய உத்தியோகத்தர்களும் பங்கெடுத்து குருதி மாதிரிகளைச் சேகரித்தனர்.