மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசெப் வாஸ் சபையினரால், மட்டக்களப்பு கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலய
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பாடசாலை சமூகத்தினரால், மாவட்டத்தில் தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ் நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி வரும்
புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசெப் வாஸ் சபையினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
கற்றல் உபகரணங்கள் பாடசாலை அதிபர் விஜேந்திரன் தலைமையில் இன்று வழங்;கப்பட்டன
;நிகழ்வில் பிரதி அதிபர் உதயகுமார், பாடசாலை ஆசிரியர்கள், புனித ஜோசெப் வாஸ் சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசெப் வாஸ் சபையினரால் கற்றல் உபகரணங்கள்