மட்டக்களப்பு மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் பட்டிருப்புக்கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வு இன்று நடைபெற்றது.
பன்மொழிக் கல்வியை மேம்படுத்தல், பரஸ்பர புரிதல் மற்றும் சமாதானத்திற்கான எழுத்தறிவு எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரணியில் மகிழுர்முனை சக்தி வித்தியாலயம், கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலய மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.தட்சனாமூர்த்தி, கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப்பணிப்பாளர் பி.திவிதரன், முறைசாராக்கல்விப்பணிப்பாளர் திருமதி.றீற்றா கலைச்செல்வவன், அதிபர் ஏ. மனோகரன், அயல் பாடசாலையின் அதிபர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பாடசாலைகளின் அபிவிருத்திச்சங்க செயலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.