மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மகளிருக்கான விசேட நிகழ்வுகள் பிரதேச செயலாளர் திரு. எஸ் .சுதாகரின் ஆலோசனை,
மற்றும் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. மேனகா புவிக்குமாரின் நெறிபடுத்தில் நேற்று இடம் பெற்றது.
சர்வதேச மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக பட்டிபளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட நான்கு திணைக்கள மகளீர் உத்தியோகஸ்தர்கள் பங்குபற்றிய
எல்லே விளையாட்டு அரசடித்தீவு விக்னேஸ்வர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனை கண்காட்சியும் இடம்பெற்றதுடன் நிகழ்வில் பல உள்ளூர் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச வைத்தியசாலை வைத்தியர், சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்,
உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள்