மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச, சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்குடன், பிரதேச மட்ட வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் பிரதேச செயலக வளாகத்தில் இன்று நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக, சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் விற்பனைக் கண்காட்சி நடைபெற்றது.
சிறந்த சிறு தொழில் முயற்சியாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட உள்ளூர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு, உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்புக்களும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன.
பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள்,சுயதொழில் முயற்சியாளர்கள் என பலரும்
விற்பனைக் கண்காட்சியில் கலந்து கொண்டனர்