மட்டக்களப்பு மயானமொன்றில் ஆணொருவரின் சடலம் மீட்பு

0
92

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு மயானத்தில்; இன்று ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படாத சடலத்திற்கு அருகாமையில், சமய வழிபாடுகள் இடம் பெற்றதற்கான தடயங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

இதனால் குறித்த பகுதியில் நரபலி பூஜைகள் எதுவும் நடாத்தப்பட்டதா? என்ற கோணத்தில் களுவாஞ்சிக்குடி குற்றத்தடவியல் பொலிஸார்
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.