28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு மாநகரசபையால், மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மாபெரும் சிரமதானப் பணி

மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மாபெரும் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகவுள்ளது.

நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கானோர் உற்சவத்தில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வருகை தரும் அடியாளர்களின் நன்மை கருதி, மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என்.சிவலிங்கம் தலைமையில்
மாபெரும் சிரமதானம் நடைபெற்றது.

மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்குளத்தினை அண்டிய பகுதிகளிலிருந்து குப்பைகூழங்கள் அகற்றப்பட்டதுடன் ஆலய உள்வீதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டன.
நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான பகுதிகளும் இனங்காணப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles