மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

0
106

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் மாவட்டச்செயலகத்தில் இன்று இடம்பெற்றது
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் மூன்றாவது தடவையாக நடாத்தப்படும் இரத்ததான முகாம் ‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’ எனும் கருப்பொருளில்
மாவட்ட செயலகம் மற்றும் கல்லடி 243 இராணுவத்தினரும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக அபிவிருத்தியை நோக்காக கொண்டு
முன்னெடுத்து வரும் செயல்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க
போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து
இரத்ததான முகாம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் விவேக் உட்பட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு தாதிய
உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் யுவதிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு – கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின்
பிறிக்கேட் கொமாண்டர் சந்திம குமார சிங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.