29 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு- வந்தாறுமூலை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில், இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் உழவு இயந்திரமும் மோதுண்டே விபத்துச் சம்பவித்துள்ளது.

வந்தாறுமூலைப் பிரதேசத்தைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய கனேசநாதன் ரகுநாதன் என்பவரே உயிரிழந்தவராவர். சுமார் 15 வருடங்கள் மத்திய கிழக்கு நாட்டில் தொழிலாளியாகப் பணியாற்றிவிட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே இவர் நாடு திரும்பியுள்ளார்.

விபத்தையடுத்து, உழவு இயந்திர சாரதி தப்பிச் சென்ற நிலையில், ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles