28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் விநியோகப் பணிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் இன்று காலை முதல் இடம்பெற்றன.
நாளைய தினம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 3 தேர்தல் தொகுதிகளிலும் 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ் வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புக்களுடன், மட்டக்களப்பு இந்து கல்லூரியிலிருந்து வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன.
இதேவேளை தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிப்பதற்கு இம்முறை 4 இலட்சத்து 49 ஆயிரத்து 686 பேர் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles