மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் கல்லூரி தின நடைபவனி

0
128

மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் கல்லூரி தினத்தை முன்னிட்டு, பழைய மாணவர்களையும் சமூகத்தையும் ஒன்;றிணைக்கும் முகமான நடை பவனி
இன்று காலை இடம்பெற்றது.
அதிபர்,ஆசிரியர்கள்,கல்லூரி அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் ஒண்றிணைந்து இவ் நடைபவனியை ஏற்பாடு செய்திருந்தனர்.
அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன், தேசிய கீதம்,பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு, நடைபவனி ஆரம்பிக்கப்பட்டது.
கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமான இவ் நடைபவணியானது மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வழியாக சென்று விநாயகபுரத்தை சென்றடைந்து
அங்கிருந்து கல்குடா,பேத்தாழை வீதி வழியாக கல்லூரியை மீண்டும் வந்தடைந்தது.
கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்களின் பிரிவு அடிப்படையில் அறிவு சார்ந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு வாகனங்களிலும்,
நடந்தும் ஆடல் பாடலுடன் ஊர்வலமாக நடைபவனி இடம்பெற்றது.
பேத்தாழையில், பேத்தாழை விபுலானந்த கல்லூரி பாடசாலை நிர்வாகம் மற்றும் பழைய மாணவர்களினால், தாக சாந்தியும், வரவேற்பும் வழங்கப்பட்டமை
விசேட அம்சமாகும்.