மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில், நேற்று மாலை இருவேறு இடங்களில் இடம்பெற்ற அனர்த்தங்களில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிறைந்துறைச்சேனை வாழைச்சேனையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறிய நிலையில் 43 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார்.
முறுத்தானையில் உள்ள வெத்திலை போட்ட மடு குளப் பகுதியில் கட்டுவலை கட்டி, மீன்பிடியில் ஈடுபட்டவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
3 பிள்ளைகளின் தந்தையான 67 வயதுடைய மூ.மயில்வாகனம் என்பவரே முதலைக்கடிக்கு இலக்காகி உயிரிழந்தவராவார்.
இவ் மரணச் சம்பவங்களின் உடற்கூற்றாய்வினை சுகாதார வைத்திய அதிகாரி எச்.எம்.எம். முஸ்தபா முன்னெடுத்ததோடு, தீடிர் மரண விசாரணையினை மரண விசாரணை அதிகாரி அ.ரமேஸ்ஆனந் மேற்கொண்டார்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருவேறு இடங்களில் இடம் பெற்ற அனர்த்தங்களில் இருவர் உயிரிழப்பு