மட்டக்களப்பு வாழைச்சேனையில் வீதி விபத்தில் சிக்கி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

0
20

மட்டக்களப்பு வாழைச்சேனை திருகோணமலை பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் மாற்றுத் திறனாளியான முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார். கலைவாணி வீதி கறுவாக்கேணியைச் சேர்ந்த 36 வயதுடைய வி.வினோசித் என்பரே உயிரிழந்தவராவர்.

நேற்று இரவு மட்டக்களப்பில் இருந்து ஓட்டமாவடி பிரதேசத்தை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டே விபத்துச் சம்பவித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள், விபத்தின் பின்னர் சம்பவ இடத்திலேயே, மோட்டார் சைக்கிளை கைவிட்டுதப்பி ஓடியுள்ளனர். வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து இன்று காலை மோட்டார் சைக்கிள் சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதேவேளை உயிரிழந்த நபரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உடற் கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.