மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது.
அதிதிகள் வரவேற்கப்பட்டதை தெடர்ந்து தேசிய கொடி எற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
பாடசாலையின் அதிபர் நவகீதா தர்ம சீலன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், ஆன்மிக அதிதியாக ராமகிருஸ்ண மிசன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் கலந்து கொண்டதுடன் பிரதம விருத்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளீதரன் கலந்து கொண்டார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த சாதாரன தரம், க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவிகளுக்கு பரிசில்கள் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது ஆசிரியர்களுக்கும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன், பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி. ரவிராஜ், மற்றும் உயரதிகாரிகள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர்
கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் வருடாந்த பரிசளிப்பு விழா இடம்பெற்றது