இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று கொழும்பு – மட்டக்குளி பகுதியில் செவ்வாய்க்கிழமை (3) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த பஸ், அளுத்மாவத்தை வீதியும் புளூமெண்டல வீதியும் சந்திக்கும் பகுதியில் உள்ள கட்டிடமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்து ஏற்பட்ட போது சாரதியும் நடத்துனருமே இருந்துள்ளனர். கண்டி – கொழும்பு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும், பஸ்ஸே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.