மட்டக்களப்பு ஆரையம்பதி மைதானத்தில் ஆரையூர் விளையாட்டு கழகத்தின் தலைவர் பாலேந்திரன் பானுபாரதி தலைமையில் வருடாந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் அதிதிகள் ஆரையம்பதி ராமகிருஸ்ணமிஸன் மகா வித்தியாலய மாணவிகளின் பேண்ட் வாத்திய இசை முழக்கத்துடன் வரவேற்கப்பட்டனர்.
பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வினைஆரம்பித்து வைத்தார்.
ஸ்ரீகந்தசுவாமி ஆலய பிரதமகுரு.சோதிநாதக் குருக்கள், ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீP கந்தசுவாமி ஸ்ரீPகண்ணகி ஸ்ரீP வீரமாகாளி அம்மன் ஆலயங்களின்
பரிபாலன சபை உறுப்பினர்கள், ஆரையம்பதி ராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலய உப அதிபர், கிராம சேவை உத்தியோகத்தர், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் என பலரும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.