மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் சிறப்பு வெளியீட்டை வெளிப்படுத்திய பாடசாலைகளுக்கு மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் விஜயமொன்றை மேற்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றுசாதனை படைத்துள்ள மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கு விஜயம் செய்து அங்கு உயர்தரப்பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதன்போது மட்டக்களப்பு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் சுபாகரன் உட்பட கல்வித்திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பாடசாலையின் அதிபர் பயஸ்ஆனந்தராஜா மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து சாதனை படைத்த மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து புனித வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை,புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலை,சிவானந்தா தேசிய பாடசாலை,விவேகானந்தா மகளிர் கல்லூரி உட்பட பல பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டினை விட 11வீத சித்தி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு அர்ப்பணிப்பு செய்த ஆசிரியர்கள்,அதிபர்கள்,கல்வித்திணைக்கள அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் நன்றிகளை தெரிவித்தார்.