மட்டக்களப்பு களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்கிகளின் பாதுகாப்பை பலப்படுத்தவது தொடர்பில், களுவாஞ்சிக்குடிப் பொலிஸார்,
பிரதேசத்திலுள்ள வங்கி முகாமையாளர்களுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடாத்தினர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபயவிக்கிரம தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
கலந்துரையாடலில், களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள அரச மற்றும் தனியார் வங்கி முகாமையாளர்கள் கலந்து கொண்டனர்.
குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பத்திகாரி பொலிஸ் பரிசோதகர் ஜோய், வங்கி முகாமையாளர்களுக்கு பாதுகாப்பு
தொடர்பிலான விளக்கங்களையும், தெழிவூட்டல்களையும் வழங்கினார்.
நாட்டின் பல இடங்களில் அண்மையில் வங்கிகளின் தன்னியக்க பணவைப்பு மற்றும் மீள எடுத்தல் இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளன.
களுவாஞ்சிகுடிப் பிரதேசத்திலுள்ள வங்கிகளின் பாதுகாப்புக்களைப் பலப்படுத்த வேண்டும். இதற்கு பொலிசாரின் முழு ஒத்துழைப்பும்
வழங்கப்படும் என்றும், வங்கி முகாமையாளர்கள் இதில் மிகவு அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பத்திகாரி பொலிஸ் பரிசோதகர் ஜோய்
குறிப்பிட்டார்.
மக்கள் பணத்தையும், தங்க ஆபரணங்களையும், வங்கிகளை நம்பியே வைப்பிலிருக்கின்றார்கள். அதனை முறையாக உரிய பாதுகாப்புடன் பேணவேண்டியது வங்கிகளின் கடப்பாடாகும் என்றும்
களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பத்திகாரி சுட்டிக்காட்டியிருந்தார்.
Home கிழக்கு செய்திகள் மட்டு. களுவாஞ்சிகுடியில் வங்கிகளின் பாதுகாப்பை பலப்படுத்தவது தொடர்பில் கலந்துரையாடல்