மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச மக்களும் வர்த்தக நிலையங்களை அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் செயற்பட்டனர்.
நகரில் பெரும்பாலன வர்த்தக நிலையங்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டு;ள்ள அதேவேளை, அரச மற்றும் தனியார் வங்கிகளும் மூடப்பட்டுள்ளன.
திருகோணமலை போன்ற தூர இடங்களுக்குச் செல்லும் ஒரு சில அரச மற்றும் தனியார் பேரூந்துகள் சேவையிலீடுபடுகின்ற போதிலும்
வீதிகள் அனைத்தும் சன நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
தலைநகர் கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் குறித்த ஆர்ப்பாட்டங்களுக்கு வகையில் வலுச்சேர்க்கும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பொதுமக்கள் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.