மட்டு.கோட்டைமுனை கனிஸ்ட
வித்தியாலயத்தில் நூலகம் திறப்பு

0
195

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையான கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலத்தில் இன்று காலை புனரமைக்கப்பட்ட நூலகம் திறந்துவைக்கப்பட்டது.
மிக நீண்டகாலமாக செயற்படாத நிலையிலிருந்த நூலகம் தனியார் வங்கி ஒன்றின் அனுசரணையுடன் புனரமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் தம்பிராஜா அருமைத்துரை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், செலான் வங்கியின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் றிஸ்வி ஹுசைன்,மட்டக்களப்பு செலான் வங்கி முகாமையாளர் பிரேமினி மோகன்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நூலகம் திறந்துவைக்கப்பட்டதுடன் மடிக்கணிணி, நூலகத்திற்குரிய தளபாடங்கள், பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் அப்பியாசக் கொப்பிகளும் வழங்கப்பட்டன.
ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் வாசிப்புத்திறனை ஏற்படுத்தும் வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.