மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் செயற்படும் சிறுவர் கழகங்களை ஒன்றிணைத்து,’ அர்த்தமுள்ள சிறுவர் பங்களிப்பு’ என்னும் தொனிப்பொருளிலான வழிகாட்டல் கருத்தரங்கு
உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. ரமீஸா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தில் செயற்படும் சிறுவர் சபைகளின் உறுப்பினர்களுக்கான சிறுவர் உரிமை சாசனம், அதன் வரலாறு மற்றும் பிரதான கொள்கைகள் தொடர்பாக இதன்போது
சிறுவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம். றுசைட் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் பங்கு பற்றிய உறுப்பினர்களுக்கு உதவி பிரதேச செயலாளரினால்
சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.