மட்டக்களப்பு பூநொச்சிமுனை கடலில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய கடல் அலையினால் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய மீன்பிடி இயந்திரப் படகு ஒன்று
சேதமடைந்துள்ளது.
சீரற்ற கால நிலை காரணமாக பாரிய கடல் அலை ஏற்பட்டதையடுத்து இயந்திர மீன்பிடி படகு சேதமடைந்துள்ளதுடன் படகில் இருந்த இயந்திரம், மீன்பிடி வலைகள் உட்பட மீன்பிடி உபகரணங்களும் சேதமடைந்தன.
இதனால் ஒரு கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஐந்து தினங்களுக்குள் பூநொச்சிமுனை கடலில் ஏற்பட்ட பாரிய கடல் அலைகளினால் ஆறு மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்திருந்தன.
இதனால் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும்
மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.