மண்முனைப் பற்று பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு, மண்முனைப் பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்,
மண்முனைப் பற்று பிரதேச செயலகம், மண்முனைப் பற்று சர்வமத ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு கரித்தாஸ் எகட் நிறுவனத்தின் அனுசரணையின் இன்று நடைபெற்றது.
மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் நடைபெற்ற இந்த செயலமர்வின் ஆரம்பவ வைபவத்தில் மட்டக்களப்பு கரித்தாஸ் எகட் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை ஏ.ஜேசுதாசன், மண்முனைப் பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திவாகர், கரித்தாஸ் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் எஸ்.மைக்கல் உட்பட மண்முனைப் பற்று பிரதேச சர்வமத ஒன்றிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் உள நல வைத்தியர் ஜெயக்குமார் செயலமர்வின் விரிவுரைகளை நடாத்தினார்.
மண்முனைப் பற்று பிரதேசத்திலுள்ள 10 பாடசாலைகளில் இருந்து 45 மாணவர்கள் செயலமர்வில் பங்கேற்றனர்.