மட்டு.மயிலம்பாவெளியில், 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு

0
189

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு ஏறாவூர் பற்று கல்வி கோட்டத்தின் மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலத்தில் 2022 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
மாணவர்களுக்கான பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டன.

வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு அகிம்சா அமைப்பினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.;நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக ஆரம்பப் பிரிவு உதவிக்கல்வி பணிப்பாளர் உமாபதி விவேகானந்தம்,ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் பற்குணம்,, சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர் சிவராஜா, ஓய்வு நிலை ஆசிரியர் தயாளன், ஏறாவூர் பற்று கோட்டக் கல்வி பணிப்பாளர் ராஜமோகன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.