மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மாமாங்கம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் 2022 ஆம் ஆண்டு சிறுவர் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது.வித்தியாலய அதிபர் வி .முருகதாஸ் தலைமையில் இடம்பெற்ற சிறுவர் பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கையில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக முறைசாரா கல்வி பிரிவு உதவி கல்விப்பணிப்பாளர் எம் .தயானந்தன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .
பாடசாலை மாணவ மாணவியருக்கு சனநாயகம் அதன் பொறுப்புக்களும் வகைகூறுதல் ,சட்டத்தின் ஆதிபத்தியம்,வாக்கு,வாக்களித்தல் ஆகிவற்றின் முக்கியத்துவம் பற்றியும் செய்முறை அறிவை பெற்றுக்கொள்வதுடன் ஜனநாயக ஆட்சிமுறைமை , வாழ்க்கை முறைமையே அனுபவங்களுடாக தெளிவுபடுத்தி கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் ,பாடசாலை வலயம் மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் உருவாக்கப்படும் மாணவர் பாராளுமன்றத்தின் அடிப்படை நோக்கமாக பாடசாலை மாணவர்கள் பல்வேறு அனுபவங்களை பெற்றுக்கொளவதற்கான செயல்பாடாக தற்போது பாடசாலை மட்டத்தில் வலய மட்டத்தில் ,மற்றும் மாகாண மட்டத்தில் புதிய சுற்று நிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவையின் அடிப்படியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.