மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட எல் எ எம். சரத் குமாரவை வரவேற்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்றுள்ள தினேஸ் கருணாரத்னவை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக எல் எ எம் .சரத் குமார இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் விசேட அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டு இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சமய வழிபாடுகளுடன் மங்கள விளக்கேற்றலுடன் தனது கடமை பொறுப்புக்களை சுபவேளையில் ஆவணத்தில் கையெழுத்திட்டு கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார் .