மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

0
3

களுத்துறை மாவட்டத்தில் அங்குருவாதொட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரெமுண பிரதேசத்தில் உள்ள பலகை விற்பனை நிலையம் ஒன்றில் சக ஊழியரால் மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் களுத்துறை, வென்தேசிவத்த,  வரக்காவெஹெர பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைவர் ஆவார்.

பலகை விற்பனை நிலையத்தில் பணிபுரியும் இரு ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் மொனராகலை , செவனகல பிரதேசத்சை் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.