மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவ உதவிகளை உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்

0
92

பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடி நோக்கி சென்ற பேருந்தொன்று நேற்று இரவு மனம்பிடிய பகுதியில் விபத்திற்குள்ளாகியது.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்று, விபத்து தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

விபத்தில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையை விரைவுபடுத்துமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு, ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

விபத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்குமாறு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன், விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், விபத்தில் உயரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.