மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சட்ட விரோதமான முறையில் பிடிக்கப்பட்டு பொதி செய்யப்பட்ட கடல் அட்டைகளை இடமாற்றம் செய்த 05 பேரை, கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
589 கடல் அட்டைகள், 03 மோட்டார் சைக்கிள் மற்றும் டைவிங் கியர்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட புஸ்ஸதேவ கடற்படைப் பிரிவின் அச்சங்குளம் முகாம் கடற்படை வீரர்களால் அச்சங்குளத்தில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சந்தேகத்தின் அடிப்படையில் 03 மோட்டார் சைக்கிள்கள் சோதனையிடப்பட்டதில் 589 கடல் அட்டைகள், பிளாஸ்டிக் கொள்கலன்களில் அடைத்து கடத்தப்பட இருந்தமை கண்டறியப்பட்டது.
இதன்போது மன்னார் பகுதியைச் சேர்ந்த 23 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 05 பேர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.