மயிலத்தமடு பண்ணையாளர்கள் உயிருக்கு ஆபத்து என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

0
250

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப்பண்ணையாளர்கள் கால்நடைகள் துப்பாக்கியால் சுட்டும், வாள்களால் வெட்டியும் படுகொலை செய்யப்படும் நிலையில், தமது உயிருக்கும் ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில், மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பண்ணையாளர்கள் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர்.


மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளில் அத்துமீறி பயிர்ச் செய்கைகளை முன்னெடுத்து வரும் பெரும்பான்மையினத்தவர்களால், பண்ணையாளர்களின்
கால்நடைகள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகி வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தலைமையிலான கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் நேரடி விஜயமொன்றை மயிலத்தமடு, மாதவனைப் பகுதிக்கு மேற்கொண்டு, கள நிலவரங்களை ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.