கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் ஒன்பது மாவட்டங்களில் 2,511 குடும்பங்களை சேர்ந்த 10,055இற்கும் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த அனர்த்தங்களால் 7 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் மாத்தறை, காலி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அக்குரஸ்ஸ – பாவன்வெல்ல பகுதியில் வௌ்ளத்தினால் சேர்ந்த கழிவுகளை அகற்றிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.பஹல – அத்துரலிய பகுதியை சேர்ந்த 42 வயதான ஒருவரே காணாமல் போயுள்ளதுடன், அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதனிடையே கிங், நில்வளா கங்கைகளில் சிறு அளவிலான வௌ்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது