27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மழையினால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு !

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் ஒன்பது மாவட்டங்களில் 2,511 குடும்பங்களை சேர்ந்த 10,055இற்கும் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த அனர்த்தங்களால் 7 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் மாத்தறை, காலி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அக்குரஸ்ஸ – பாவன்வெல்ல பகுதியில் வௌ்ளத்தினால் சேர்ந்த கழிவுகளை அகற்றிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.பஹல – அத்துரலிய பகுதியை சேர்ந்த 42 வயதான ஒருவரே காணாமல் போயுள்ளதுடன், அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதனிடையே கிங், நில்வளா கங்கைகளில் சிறு அளவிலான வௌ்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles