மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு

0
78

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 4500 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு மாங்குளம் ஆதார மருத்துவமனை மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் சற்றுமுன்னர் அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது 2017ஆம் ஆண்டு இந்த நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.