500 மில்லியன் யுவான் பெறுமதியுடைய அரிசி தொகையை 6 கட்டங்களாக மானிய அடிப்படையில் இலங்கைக்கு வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட அரிசி தொகை எதிர்வரும் 25 ஆம் திகதியும், இரண்டாம் கட்டம் 30 ஆம் திகதியும் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.
அரிசி தொகையில் 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை பாடசாலைகளில் மாணவர்களுக்கான உணவு வழங்குவதற்காக உபயோகிப்பதற்கு வழங்கவுள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் இந்தியா தமிழக அரசாங்கத்திடமிருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சீனாவும் அரிசியை வழங்கி இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.