மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

0
104
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

தெல்தெனிய கரல்லியத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதிலேருவர் உயிரிழந்துள்ளார்.

சீமெந்து உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றில் கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கிய நிலையில் குறித்த நபர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் 62 வயதுடைய கட்டுகித்துல, உடிஸ்பத்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.