இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்தவின் கருத்து தொடர்பில், சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஊடகப் பேச்சாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன், தனது கருத்திற்காக, பகிரங்கமாக மன்னிப்பும் கோரியுள்ளார்.
அண்மையில், தேவை ஏற்பட்டால், எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி, மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என, கருத்து வெளியிட்டமை தொடர்பில், சர்ச்சை நிலவியது.
அதனையடுத்து, மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த, ஊடகப் பேச்சாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.