நாளை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இரண்டு மணித்தியாலங்கள் மின்விநியோகத்தடையை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, முற்பகல் ஒரு மணித்தியாலமும் பிற்பகல் ஒரு மணித்தியாலமும் மின்விநியோகத்தடையை அமுல்படுத்த குறித்த ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.