மியன்மார் நில அதிர்வில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

0
23

மியன்மார் நில அதிர்வில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,700 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 50 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 4,521 பேர் காயமடைந்துள்ளதாகவும், 441 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் மியன்மார் இராணுவத் தலைமையதிகாரி குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.