முன்பள்ளி பிள்ளைகளுக்கு பகல் உணவு வழங்கும் செயற்றிட்டத்தை மீள ஆரம்பிக்க முடிவு

0
160

உலக வங்கியின் ஆதரவின் கீழ், முன்பள்ளி பிள்ளைகளுக்கான பகல் உணவு வழங்கும் செயற்றிட்டத்தை இம் மாதம் முதல் மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
35 ஆயிரம் மலையக பிள்ளைகள் மற்றும் போசாக்கு குறைப்பாடுள்ள பகுதிகளில் வாழும் 1 இலட்சத்து 55 ஆயிரம் சிறார்களுக்கு இந்த மதிய உணவு வழங்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நயன எஸ்.பி.கே.டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது, 90 ஆயிரம் போசாக்கு குறைபாடுள்ள முன்பள்ளி சிறார்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதுடன், அதற்காக விநியோகத்தர்களுக்கு தலா உணவு ஒன்றுக்கு 30 ரூபா வழங்கப்படுகின்றது.
எனினும், அந்தத் தொகை போதாது என்பதால் அதனை 60 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது. அதற்கான பணம் உலக வங்கியின் உதவியின் கீழ் வழங்கப்படவுள்ளது.