28 C
Colombo
Sunday, September 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முல்லைத்தீவில் இன்று மாலை கோர விபத்து:மரண நிகழ்வுக்கு சென்று திரும்பிய தம்பதிக்கு நேர்ந்த நிலை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் சந்திப் பகுதியில், இன்று மாலை இடம்பெற்ற விபத்தில், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் இருந்து பருத்தித்துறை நோந்கி பயணித்த, இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, உழவனூர் பகுதியில் பகுதியில் வசிக்கும், கணவன் மனைவி ஆகிய இருவரும், மரண நிகழ்வுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த வேளை, வேக கட்டுப்பாட்டை இழந்து மோதித் தள்ளியது.
இதனால், இருவரும் படுகாயமடைந்த நிலையில், பாதசாரிகள் உதவியுடன் மீட்கப்பட்டு, தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து, மேலதிக சிகிச்சைக்காக, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய போருந்து சாரதி மற்றும் நடத்துனர், அருகில் உள்ள தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
விபத்துக் காரணமாக, அப்பகுதியில், அதிகளவான பொலிசார் மற்றும் விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
இதன் போது, நடத்துனர் மற்றும் சாரதி இருவரும், சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.
இந்த விபத்துக் காரணமாக, பல மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
இருப்பினும், சம்பவம் தொடர்பில், புதுக்குடியிருப்பு பொலிஸார் மற்றும் தருமபுரம் பொலிஸார் இணைந்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles