சாரணியத்தின் 110 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, முல்லைத்தீவு மாவட்டத்தில் சாரணியர்களால் விழிப்புணர்வு நடைபவனி மேற்கொள்ளப்பட்டது. துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சாரணியர்கள் மல்லாவி வைத்தியசாலையில் இருந்து அனிஞ்சியன் குளம் பாடசாலை வரை விழிப்புணர்வு நடைபவனியை மேற்கொண்டனர். கரைத்துறைப்பற்று கோட்டத்திற்கு உட்பட்ட சாரணியர்கள் முள்ளியவளை மாஞ்சோலை பகுதியிலிருந்து வித்தியானந்தா கல்லூரி மைதானம் வரை நடைபவனியை மேற்கொண்டனர். கலைமகள் வித்தியாலயத்தில் இருந்தும் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வரை வழிப்புணர்வு நடைபவனி மேற்கொள்ளப்பட்டது. புதுக்குடியிருப்பு கோட்டத்திற்கு உட்பட்ட சாரணியர்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானம் வரை நடைபவனியாக விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்நிகழ்வுகளில் சாரணிய உதவித்தலைமை ஆணையாளர், பாடசாலை அதிபர்கள், மாவட்ட சாரணிய ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.


