சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிக்கும் நிகழ்வு, இன்று, முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் முபாரக் தலைமையில் இடம்பெற்றது.

மரதன் ஓட்ட போட்டி, இன்று காலை முல்லைத்தீவில் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அதில் வெற்றியீட்டிய வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று காலை 11.00 மணிக்கு இடம்பெற்றது.

இதன் போது, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் சி.குனபாலன், திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் பங்கேற்று, பரிசில்களை வழங்கி வைத்தனர்.இந்த நிகழ்வில், அதிகாரிகள் மற்றும் போட்டியாளர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.
